சூடான்: ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் - 100 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

April 17, 2023

சூடான் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ராணுவ புரட்சி ஏற்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தற்போது, அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. ராணுவத்தின் தலைவர் அப்தேல் பட்டா அல் புர்கான் மற்றும் துணை ராணுவத்தின் தலைவர் முஹம்மது ஹம்தான் டக்லோ ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது மோதல் வரை கொண்டு சென்றுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல், ராணுவம் மற்றும் […]

சூடான் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ராணுவ புரட்சி ஏற்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தற்போது, அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன.

ராணுவத்தின் தலைவர் அப்தேல் பட்டா அல் புர்கான் மற்றும் துணை ராணுவத்தின் தலைவர் முஹம்மது ஹம்தான் டக்லோ ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது மோதல் வரை கொண்டு சென்றுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. வன்முறையில் இரு குழுக்களும் ஈடுபட்டதால், சூடானில் பதற்றம் அதிகரித்துள்ளது. தலைநகர் கார்டூம், வன்முறையால் சூழப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3 நாட்களாக இரு ராணுவ பிரிவுகளுக்கும் இடையே வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 100 ஐ நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், இந்த வன்முறையில் இந்தியர் ஒருவர் பலியானதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu