சூடான் நாட்டில் செயல்பட்டு வரும் பாராமிலிட்டரி ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (Paramilitary RSF) என்ற ராணுவ பிரிவு அங்கிருக்கும் கிராமம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக துணை ராணுவ பிரிவு தாக்குதல் நடத்தியுள்ளது என கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை அன்று சூடானில் உள்ள கீசிரா மாகாணத்தில், உள்ளூர் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த துணை ராணுவ பிரிவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். Wad Alnoura என்ற கிராமத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை என விமர்சிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான மக்களின் குரலாக Wad Madani Resistance Committee ஒலித்து வருகிறது.