வேளாண்மை பல்கலைக்கழகம் முதுநிலை படிப்புகளுக்காக நடைபெற்ற நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவு தேர்வு கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் இ - மெயில் முகவரிக்கு இந்த தகவல் நேற்று இரவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திரும்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவு தேர்வு குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது