டெல்லி தாஜ் பயணிகள்விரைவு ரயிலில் நான்கு பெட்டிகள் திடீரென தீப்பிடித்தது.
தென்கிழக்கு டெல்லியில் சரிதா விஹார் பகுதியில் தாஜ் விரைவு ரயிலின் நான்கு பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாலை 4 மணி அளவில் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இதில் உயிர் சேதம் குறித்து எவ்வித தகவலும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது