தென் கொரியாவில் அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. அதிபர் யூன் சுக் இயோல், எதிர்க்கட்சியினர் நாட்டின் நாடாளுமன்றைக் கட்டுப்படுத்தி வட கொரியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக் கூறி, அவசர நிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிபரின் இந்த முடிவுக்கு அவரது சொந்தக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றம் அவசர நிலை ராணுவச் சட்டத்தை ரத்து செய்துள்ளது. தென் கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, இந்த திடீர் அவசர நிலை பிரகடனம் குறித்து இதுவரை எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை.