இந்திய தேர்தல் ஆணையராக பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரளா மாநிலத்தின் ஞானேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் சந்திரா பாண்டே ஓய்வு பெற்றதை தொடர்ந்து இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இதில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கான பணியை துரிதமாக செய்து கொண்டிருந்த நிலையில் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை அடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் 2 தேர்தல் ஆணையர்களுக்கான பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரளா மாநிலத்தின் ஞானேஷ்குமார் ஆகியோர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர் .