ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி நீளமான பகல் நாளாக சொல்லப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள அறிவியல் இங்கே விளக்கப்படுகிறது.
பூமியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜூன் 21ஆம் தேதி நீளமான பகல் நாளாக அமைகிறது. ஏனெனில், அன்றைய நாளில், பூமியின் வட துருவம் சூரியனுக்கு மிக நெருக்கமாக இருக்கும். குறிப்பாக, நண்பகல் பொழுதில் மிகவும் அருகில் இருக்கும். இவ்வாறு நேர்வதால், அன்றைய தினத்தில் நீளமான பகல் பொழுதும், குறுகிய இரவு பொழுதும் அமைகிறது. அப்போது, பூமியின் அச்சு 23.5 டிகிரி சாய்வாக இருக்கும். எனவே, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளை விட வடக்கில் உள்ள பகுதிகளில் நீளமான பகல் பொழுது நிலவும்.