திருவனந்தபுரம்-சென்னை இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கம்

April 20, 2023

திருவனந்தபுரம்-சென்னை இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கோடை காலத்தில் ரெயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரம்-சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) வருகிற மே மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. 3-ந் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை […]

திருவனந்தபுரம்-சென்னை இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

கோடை காலத்தில் ரெயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரம்-சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) வருகிற மே மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. 3-ந் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) மே மாதம் 4-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu