சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், விண்வெளியில் இருந்து மார்ச் 19ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், 10 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவர்கள் பல மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்து வந்தனர்.
இந்த நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், விண்வெளியில் இருந்து பேட்டி அளித்துள்ளனர். அதில் அவர்கள், "நாசாவின் க்ரூ-10 விண்கலம் மார்ச் 12ஆம் தேதி ஏவப்படும், மற்றும் மார்ச் 19ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்தனர்.