சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதம்

June 28, 2024

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதி மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில் மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஐந்தாம் தேதி விண்வெளிக்கு சென்றார். அவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி பூமிக்கு திரும்ப முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் பயண திட்டம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் அவர்களால் பூமிக்கு வர இயலவில்லை. இதற்கு காரணம் அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை என்று […]

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதி மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில் மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஐந்தாம் தேதி விண்வெளிக்கு சென்றார். அவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி பூமிக்கு திரும்ப முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் பயண திட்டம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் அவர்களால் பூமிக்கு வர இயலவில்லை. இதற்கு காரணம் அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்ய வேண்டிய ஸ்டார்லைனரை போயிங் நிறுவனம் உருவாக்கி இருந்தது. இந்த விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த கசிவு ஐந்து முறை ஏற்பட்டதால் தொடர்ந்து பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை சரிசெய்ய நாசா மற்றும் போயிங் நிறுவனம் முயற்சி செய்து வருகின்றன. ஒருவேளை பிரச்சனையை தீர்க்க முடியாவிட்டால் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை அழைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu