சூரியனில் தோன்றிய கரும்புள்ளி ஒன்று, பூமியை விட 5 மடங்கு பெரிதாக விரிவடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 24 மணி நேரத்திற்குள் இந்த அளவு விரிவாக்கம் நடந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். AR 3354 என்று இந்த கரும்புள்ளிக்கு பெயரிடப்பட்டுள்ளது. நேற்று வரை இந்த கரும்புள்ளி சூரியனில் தென்படவில்லை. ஒரே நாளுக்குள் பூமியை விட 5 மடங்கு பெரிதாக மாறியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த கரும்புள்ளியின் போக்கு தொடர்ந்து நிலைத் தன்மை இல்லாததாக உள்ளதால், எந்த நேரத்திலும் இது வெடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த சூரிய புள்ளி காரணமாக, அதிதீவிர சூரிய புயல் பூமியைத் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சூரிய புயலின் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.