பூமியை விட பெரியதாகவும், நெப்டியூன் கிரகத்தை விட சிறியதாகவும் உள்ள புறக்கோள் ஒன்று ‘சூப்பர் எர்த்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பூமியை போலவே பாறைகள் நிறைந்த மற்றும் வளிமண்டலம் கொண்ட கிரகமாக இது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்தை தாண்டி உள்ள புறக்கோள்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 55 Cancri e அல்லது Janssen என்று பெயரிடப்பட்டுள்ள கிரகம் ஆய்வு செய்யப்பட்டது. அதிகமான பாறைகள் கொண்ட இந்த கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை 3140 டிகிரி பாரன்ஹீட் என தெரிய வந்துள்ளது. எனவே, வளிமண்டலம் மற்றும் பாறைகள் நிறைந்திருந்தாலும், இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்பட்டுள்ளது.