வரலாற்றில் முதல் முறையாக, சொகுசு கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மத்தியில் சொகுசு கார்கள் தேவை அதிகரித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள சொகுசுக் கார்கள் விற்பனை 50% உயர்ந்துள்ளது. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி, ஃபெராரி, ஆஸ்டன் மார்ட்டின், பென்ட்லி உள்ளிட்ட சொகுசுக் கார்கள் இந்தியாவில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன.
நடப்பாண்டில், இந்தியாவில் விற்கப்படும் சொகுசு கார்களின் எண்ணிக்கை 450 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 300 சொகுசு கார்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சொகுசு கார் நிறுவனங்களின் இந்திய பிரிவு உயர் அதிகாரிகள் கார் விற்பனை உயர்ந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். மேலும், விற்பனை உயர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.