நடப்பு நிதியாண்டில் ரூ.3.25 லட்சம் கோடிக்கான துணை மானிய கோரிக்கை

December 10, 2022

நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.3.25 லட்சம் கோடி செலவழிப்பதற்கான ஒப்புதல் கோரி, துணை மானிய கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் துணை மானிய கோரிக்கையை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், ரூ.4.36 லட்சம் கோடிக்கான கூடுதல் செலவினங்களுக்கு அவையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ரூ.4.36 லட்சம் கோடியில் ரூ.1.10 லட்சம் கோடி அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செலவு குறைப்பு சேமிப்பு மூலம் திரட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.3.25 லட்சம் கோடி செலவழிப்பதற்கான ஒப்புதல் கோரி, துணை மானிய கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் துணை மானிய கோரிக்கையை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், ரூ.4.36 லட்சம் கோடிக்கான கூடுதல் செலவினங்களுக்கு அவையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ரூ.4.36 லட்சம் கோடியில் ரூ.1.10 லட்சம் கோடி அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செலவு குறைப்பு சேமிப்பு மூலம் திரட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3.25 லட்சம் கோடி கூடுதல் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் துணை மானிய கோரிக்கையில், ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்கு ரூ.80,348.25 கோடி , தொலை தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சகங்களின் செலவு தேவைகளைப் பூர்த்தி செய்ய முறையே ரூ.13,669 கோடி, ரூ.12,000 கோடி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்காக ரூ.10,000 கோடி, ஊரக வளர்ச்சி அமைச்சத்திற்கு ரூ.46,000 கோடி கூடுதல் பணம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu