ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டபிரிவு 370 மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணை இன்று தீர்ப்புக்கு வழங்கப்பட்டது. இதில் மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விரைவில் மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும். காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.