சென்னை மெட்ரோ ரெயிலுக்கு பாதுகாப்பு செயல்திறனுக்கான சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2024 ஆம் ஆண்டுக்கான 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கலம் விருதை பெற்றுள்ளது. இந்த விருது, மெட்ரோ திட்டத்தின் கட்டம் 2-ன் கட்டுமான தளங்களில் சிறந்த பாதுகாப்பு செயல்திறனுக்காக வழங்கப்பட்டது. 118.9 கி.மீ. நீளத்தில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும் இந்த திட்டத்தில், கலங்கரை விளக்கம் முதல் பாரதிதாசன் சாலை வரை உள்ள UG-01 தொகுப்பு, ITD Cementation India நிறுவனத்தால் கட்டமைக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இந்தியா முழுவதும் மெட்ரோ ரெயில் பிரிவில் இந்த விருதைப் பெற்ற ஒரே நிறுவனம் ஆகும். 2025 ஜனவரி 21-ஆம் தேதி மெட்ரோஸில் நடந்த விழாவில், இணை பொது மேலாளர் பி. கவுந்தின்ய போஸ், விருதினை மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கி வாழ்த்துகள் பெற்றார்.