ஸ்மார்ட் சிட்டி தரவரிசையில் குஜராத்தின் சூரத் முதலிடத்திலும், தமிழகத்தின் மதுரை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவின் 100 நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவதற்காக மத்திய அரசால் 2015ல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 2016 ஜனவரி முதல் 2018 ஜூன் வரையிலான பல்வேறு சுற்றுப்போட்டியின் மூலம் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் இந்த நகரங்கள் தங்களின் வளர்ச்சி திட்டங்களை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் அடிப்படையில் இதற்கான காலகெடு 2024 ஜூன் வரை மத்திய அரசு நீட்டித்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 நகரங்கள் பட்டியலில் குஜராத் சூரத் மாநிலம் முதல் இடத்தையும், ஆக்ரா, அஹமதாபாத், வாரணாசி, போபால் ஆகியவை முதல் ஐந்து இடங்களிலும் உள்ளன. துமக்குரு, உதய்பூர், மதுரை, கோட்டா, சிவமோஹா ஆகியவை அடுத்த 5 இடங்களை பிடித்துள்ளது.