மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா, சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் 7 நாட்களுக்குள் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் அமைதி குன்றியதால் மக்கள் கடுமையான துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பதால், சமூக நல்லிணக்கத்திற்காக அனைவரும் ஒழுங்கை பேண முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏழு நாட்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதியளித்த அவர், அதற்கு பின் கண்டுபிடிக்கப்படும் ஆயுதங்களுக்கு கடுமையான தண்டனை இருக்கும் என எச்சரித்துள்ளார். மணிப்பூரில், பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலாகியுள்ள நிலையில், 2027 வரை சட்டப்பேரவை இடைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.