புதிய ரேஷன் கார்டுகளுக்கான பணிகளுக்கான நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்காக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என வட்ட வழங்கல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி அட்டைக்காக விண்ணப்பித்த விண்ணப்பங்கள் கடந்த 5 மாதங்களாக நிலுவையில் இருக்கின்றன.
சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேஷன் கார்டு பணிகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்க பட்டுள்ளனர்.