தமிழக பள்ளி கல்வித்துறை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா தேர்வு பணிகளில் சுணக்கமாக செயல்பட்டு வந்ததால் இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலும், முறைகேடுகளுக்கு உடன் போனாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.