சுஸ்லான் எனர்ஜியின் பங்கு மதிப்பு கடந்த மூன்று மாதங்களில் 113% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், நிறுவனம் பெற்றுள்ள வரலாறு காணாத காற்று ஆற்றல் ஒப்பந்தங்கள் மற்றும் நல்ல நிதி முடிவுகள் ஆகும். இந்த வளர்ச்சியின் காரணமாக, சுஸ்லான் எனர்ஜியின் பங்கு அதன் வரலாற்றில் இல்லாத அளவு உயர் மதிப்பில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சுஸ்லான் எனர்ஜியின் பங்கு மதிப்பு அதிகமாக மதிப்பிட பட்டுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும் பல முதலீட்டு ஆலோசகர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். முதலீட்டாளர்கள், சுஸ்லான் எனர்ஜியில் முதலீடு செய்வதற்கு முன், அதனுடன் தொடர்புடைய அபாயங்களை முழுமையாக புரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.