சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் தலைவராக இருந்த ஒசாமு சுசுகி, டிசம்பர் 25, 2024 அன்று 94 வயதில் காலமானார். நீண்ட காலமாக லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சுசுகி நிறுவனத்தின் நிறுவனர் மிச்சியோ சுசுகியின் பேத்தியான ஷோகோ சுசுகியை மணந்த பிறகு 1958-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் கெய்ரோவில் 1930-ம் ஆண்டு பிறந்த ஒசாமு சுசுகியின் தலைமையின் கீழ் சுசுகி நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக உயர்ந்தது. குறிப்பாக இந்தியாவில் சுசுகி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1982-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்துடன் இணைந்து மாருதி 800 காரை அறிமுகப்படுத்தியது. மேலும், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன் மற்றும் டொயோட்டா போன்ற பிற நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டது. எரிபொருள் மைலேஜ் தொடர்பான ஒரு ஊழலில் சிக்கியதையடுத்து 2016-ம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். 2023-24-ம் நிதியாண்டில் சுசுகி நிறுவனம் உலகளவில் 3.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்தது. மேலும், 1.9 மில்லியன் மோட்டார் சைக்கிள்களையும் விற்பனை செய்தது.
இதில் இந்தியாவில் மட்டும் 50 சதவீத வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.