ஸ்வீடன் பள்ளியில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.
ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஒரிபுரொ நகரில் இயங்கும் மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயிலும் இந்த பள்ளியில் ஏற்பட்ட அச்சத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.














