செயற்கை கையில் 80% தொடு உணர்வை பெற்ற ஸ்வீடன் பெண்மணி

October 18, 2023

ஸ்வீடனைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், செயற்கை கை மூலமாக 80% தொடு உணர்வை பெற்றுள்ளார். இது அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.நீண்ட காலமாகவே, பிராஸ்தடிக் கை மற்றும் கால்கள் மூலம் முழுமையான அனுபவத்தை கொடுப்பதற்கு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். தனிப்பட்ட முறையில் மாற்றுத்திறனாளிகளை இயங்க வைப்பதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, ஸ்வீடனை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு, விபத்து காரணமாக துண்டிக்கப்பட்ட வலது கை செயற்கை முறையில் […]

ஸ்வீடனைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், செயற்கை கை மூலமாக 80% தொடு உணர்வை பெற்றுள்ளார். இது அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.நீண்ட காலமாகவே, பிராஸ்தடிக் கை மற்றும் கால்கள் மூலம் முழுமையான அனுபவத்தை கொடுப்பதற்கு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். தனிப்பட்ட முறையில் மாற்றுத்திறனாளிகளை இயங்க வைப்பதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, ஸ்வீடனை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு, விபத்து காரணமாக துண்டிக்கப்பட்ட வலது கை செயற்கை முறையில் பொருத்தப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டில், அவரது எலும்புடன் பிணைக்கும் விதத்தில் பயோனிக் கை அவருக்கு பொருத்தப்பட்டது. அதன் பிறகு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது, அந்த பெண், சராசரி மனிதர்களைப் போலவே தனது கைகளை இயக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, கிட்டத்தட்ட 80% கை செயல்பாடுகளும், தொடு உணர்வுகளும் மீண்டும் கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu