சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. அதன் பிறகு தற்போது நான்காம் முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது. சுமார் 250 இடங்கள் கொண்ட சிரியா பாராளுமன்றத்துக்கு 1500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான புரட்சி குழுக்கள் இயங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேர்தலை புறக்கணிக்கின்றனர்.
இன்றைய நிலையில், லட்சக்கணக்கான சிரியா நாட்டினர் வெளிநாட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, பெரும்பாலானவர்கள் வாக்குப்பதிவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வலிமையான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இல்லை. சுயேட்சையாக மட்டுமே பலர் போட்டியிடுகின்றனர். எனவே, ஆளும் கட்சியே அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கருதப்படுகிறது. அதன்படி, அதிபர் பாஷர் ஆசாத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.