சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் டமாஸ்கஸ் ஆகிய இரண்டு விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கிறது.அலெப்போ மற்றும் டமாஸ்கஸ் விமான நிலையங்களில் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளது. இப்போது இரண்டு விமான நிலையங்களிலும் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வடமேற்கு சிரியாவில் உள்ள லடாக்கிய நகருக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. சிரியாவின் அலெப்போ மற்றும் டமாஸ்கஸ் விமான நிலையங்கள் ராணுவ தளங்களையும் நடத்துகின்றன. இவை ஈரான் நாட்டு ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்புக்கு அனுப்பும் இடங்களாக கூறப்படுகிறது. எனவே தான் இஸ்ரேல் இந்த விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் விரைவில் சிரியாவிற்கு பயணம் செய்ய இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.