மும்பை விமான நிலையத்தில், 2 மணி நேர சர்வர் பின்னடைவுக்கு பின்னர் இணைய சேவைகள் மீண்டும் தொடக்கம்

December 2, 2022

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில், நேற்று மாலை, 2 மணி நேரத்திற்கு, இணைய சேவை முடக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மும்பை நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளின் போது, கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால், விமான நிலையத்தில் இணைய சேவை முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வர் மற்றும் இணையம் முடங்கியதால், மும்பை விமான நிலையத்தில், பயணிகளின் விமான போக்குவரத்து தாமதமானது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்டனர். […]

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில், நேற்று மாலை, 2 மணி நேரத்திற்கு, இணைய சேவை முடக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மும்பை நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளின் போது, கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால், விமான நிலையத்தில் இணைய சேவை முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வர் மற்றும் இணையம் முடங்கியதால், மும்பை விமான நிலையத்தில், பயணிகளின் விமான போக்குவரத்து தாமதமானது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்டனர். எனினும், பெரிய பிரச்சனை எதுவும் நேரிடவில்லை. இரண்டு மணி நேரங்களில் பாதிப்புகள் சரி செய்யப்பட்டு, மீண்டும் வழக்கமான பணிகள் தொடங்கப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu