டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 15 ரன் எடுத்தபோது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நீடித்ததால் 17 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதில் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது