இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன், மும்பையில் பிறந்தவர். பல திரைப்படங்களில் தபேலா இசை அமைத்து பிரபலமானார். உலகளாவிய புகழ் பெற்ற இவர், 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளால் அவரை கவுரவித்துள்ளது. 73 வயதான ஜாகிர் உசைன், தற்போது அமெரிக்காவில் வாழ்ந்தார். சமீபத்தில், நெஞ்சுவலி காரணமாக அவர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்பட்டது. அவரது மறைவுக்கு பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.