இன்று காலை தைவான் நாட்டை சுற்றி சீனாவை சேர்ந்த 30 ராணுவ விமானங்கள் மற்றும் ஒன்பது கடற்படை கப்பல்கள் வந்தன.
இதனை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவது, நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தைவானின் வடக்கு மற்றும் தென்மேற்கு வான் பகுதியில் சீனாவின் 20 விமானங்கள் நுழைந்துள்ளன. அவற்றை தைவான் ஆயுத படைகள் கண்காணிக்கின்றன. மேலும் பதிலடி தருவதற்கு படைகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் இரண்டு விமானங்கள் தைவான் ஜலசந்தி பகுதியில் நுழைந்துள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் தைவானை சுற்றி சீனாவின் 359 ராணுவ விமானங்கள் மற்றும் 24 கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டது என்ற அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தைவானுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனினும் தைவான் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.