தைவான் நாட்டை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனமான எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், தனது லாபத்தில் ஊழியர்களுக்கு பங்களிக்க முன் வந்து, 52 மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு போனசாக அறிவித்துள்ளது.
எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தால், 150 க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. நிறுவனத்தில் 10000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், இந்த நிறுவனம் தனது லாபத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குகிறது. அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு, 40 மாத சம்பளம் ஊழியர்களுக்கு போனசாக வழங்கப்பட்டது. தற்போது, குறைந்தபட்சமாக 45 மாத சம்பளமும், திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு 52 மாத சம்பளமும் போனசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில், பொதுவாகவே ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, மூத்த அதிகாரிகள் சிலர் கோடிகளில் போனஸ் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 2023 ஆம் ஆண்டில், சரக்கு போக்குவரத்து அதிகரித்தால், ஊழியர்களுக்கு போனஸ் தொகை மேலும் அதிகரிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.