தைவானில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவானின் கிழக்கு பகுதியான ஹுவாலினில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தொடர்ந்து பல முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வீதிக்கு ஓடி வந்தனர். இந்த சம்பவத்தால் உயிரிழப்பு எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. முன்னதாக, கடந்த மூன்றாம் தேதி 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கூறப்பட்டது. அதில் 14 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 180 க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஹுவாலின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வாரம் முழுவதும் தைவானில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் இடிந்து விட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.