சீனா செல்ல வேண்டாம் என மக்களுக்கு தைவான் அரசு எச்சரிக்கை

June 29, 2024

சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று தைவான் அரசு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானை தன்னுடன் மீண்டும் இணைத்துக் கொள்ள சீனா விரும்புகிறது. தைவான் உடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு தைவான் எல்லையில் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. இதையடுத்து சீனா மற்றும் அதன் தன்னாட்சி பகுதிகளான மக்காவோ, ஹாங்காங் போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறு தைவான் அரசு அறிவுறுத்தி உள்ளது. […]

சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று தைவான் அரசு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவானை தன்னுடன் மீண்டும் இணைத்துக் கொள்ள சீனா விரும்புகிறது. தைவான் உடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு தைவான் எல்லையில் போர் விமானங்களை அனுப்பியுள்ளது.

இதையடுத்து சீனா மற்றும் அதன் தன்னாட்சி பகுதிகளான மக்காவோ, ஹாங்காங் போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறு தைவான் அரசு அறிவுறுத்தி உள்ளது. லட்சக்கணக்கானோர் சீனாவில் வசித்து வருகின்றனர். எனவே தினமும் நேரடி விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படுகிறது. இந்நிலையில், தைவான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் சீன நாட்டில் தைவான் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களுக்கு மரண தண்டனை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu