தைவானுக்கு 3000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
3000 கோடி மதிப்பிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருதுகிறது சீனா. ஆனால் இதனை தைவான் விரும்பவில்லை. எனவே சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக செயல்படுவதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் அதிபர் லாய் சிங் டே இந்த முடிவை வரவேற்றுள்ளார். இந்த ராணுவ தளவாட கொள்முதல் மூலம் தைவானின் ராணுவம் வலிமை அடையும் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க வெளியூர் துறை அமைச்சரும் கூறுகையில், இந்த ஆயுத விற்பனையால் பிராந்தியத்தில் ராணுவ சமநிலை பாதிக்கப்படாது என்றது.