ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, காரில் தனியாக பயணம் செய்யக்கூடாது, ஆண் துணை இருந்தால்தான் செல்ல வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நிலையில் தற்போது பத்து வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்றாம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் படிக்கக் கூடாது எனவும் தாலிபன் அரசு உத்தரவிட்டுள்ளது.