தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், தாலிபான் அதிகாரிகளை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று நடந்த தாக்குதலில், 11 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. பதாஷன் மாகாண துணை ஆளுநர் கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களுள் தாலிபான் முன்னாள் அதிகாரி ஒருவர் உள்ளதாக கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ எஸ் பயங்கரவாதிகளின் சதி வேலையாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.