காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தை நடத்த கனடா விருப்பம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் மேலானி ஜோலி கனடா தலைநகர் கனடா தலைநகர் ஒட்டாவாவில் கூறியதாவது, காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொலையால் இந்தியாவுடன் எழுந்த ராஜதந்திர பிரச்சனைகளுக்கு தீர்வு காண அந்நாட்டுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த கனடா விரும்புகிறது. இது தொடர்பாக நாங்கள் இந்தியாவை கேட்டிருக்கிறோம். இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்தும் பேசியுள்ளோம். தூதரக அதிகாரிகள் மூலம் தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை நிச்சயம் சிறப்பான ஒரு முடிவை பெற்று தரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். இதற்கிடையே இந்தியா உடனான பிரச்சனைகளை மேலும் வளர்க்க விரும்பவில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் கூறியுள்ளார்.














