தாம்பரம் சென்னை கடற்கரை வழித்தடத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
தாம்பரம் சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில் போக்குவரத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்சார ரயில்களை வேலைக்கு செல்வோர் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை பாதிக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நேற்று செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்படைந்தது. தற்போது மற்றொரு சம்பவத்தில் மின்சார ரயில் போக்குவரத்து தடை பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.