தமிழகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 12616 பள்ளிகளில் இருந்து 9.15 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவடைந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி நாளை காலை 9. 30 மணி முதல் https:tnresults.nic. http:/dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்