தமிழகத்தில் இன்று காலை 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்க அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 8 லட்சத்து 11,172 மாணவர்களில் 7 லட்சத்து 39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் 91.17 ஆக உள்ளது. அதில் மாணவிகள் 4,26,720 பேர் தேர்வு எழுதியதில் 4,04,143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.69 ஆகும். மாணவர்கள் 3,84,351 பேர் தேர்வு எழுதியதில் மூன்று லட்சத்து 35,397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களில் தேர்ச்சி சதவீதம் 87.26 ஆக உள்ளது.