எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

September 16, 2022

எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் தலைமையில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. மாநாட்டில் கரூர், ராமநாதபுரம் தொழிற்பேட்டையில் ரூ.2.83 கோடியில் பொது வசதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய […]

எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் தலைமையில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. மாநாட்டில் கரூர், ராமநாதபுரம் தொழிற்பேட்டையில் ரூ.2.83 கோடியில் பொது வசதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும். மதுரை மாவட்டத்தில் 5,000 பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 3.37 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் 18 பொருட்கள் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்றார்.

எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாடு விரைவில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு ஆகும். மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடி திட்ட மதிப்பில் 5 ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது . மேலும், திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர், உதகையில் நியோ டைடல் பூங்காக்களை அரசு உருவாக்கி வருகிறது என்று அவர் கூறினார்.


0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu