தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை மழை பரவலாக பெய்து வெப்பத்தை தணித்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயலால் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புயல் ஆனது நேற்று வடக்கு திசையில் நகர்ந்து […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை மழை பரவலாக பெய்து வெப்பத்தை தணித்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயலால் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புயல் ஆனது நேற்று வடக்கு திசையில் நகர்ந்து வங்காள கடற்கரை அருகில் சாகர் தீவுக்கும் வங்காளதேசத்தின்
கேபுபராவிற்கும் இடையே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் ஒரு இடங்களில் மழை பெய்தது அதிகபட்சமாக கன்னியாகுமரியில் மழை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கில் வடமேற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி காற்று வீசி வருவதன் காரணமாக ஜூன் இரண்டாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால் வெப்பநிலையை பொருத்தவரை அடுத்த நான்கு நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயர கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu