வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. கூட்டம் ஆரம்பமான அன்றே 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், அதற்குப் பின்னர் 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரையும் நடைபெற்றது.
இந்த விவாதம் முடிவடைந்த பின்னர், சட்டசபை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது. இப்போது, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கியுள்ளது.