இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் சென்னை வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மாரி தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். முன்னதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு துபாய் மற்றும் அபுதாபி நாடுகளுக்கு சென்று அங்கு தொழில்துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார். மேலும் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க தமிழக வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி துபாயில் 2600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக துறை அமைச்சர் அப்துல்லா தலைமையிலான குழுவினர் நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்திற்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உரிமைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.