தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 400 யூனிட் வரை 4.80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 4.60 என்ற அளவில் இருந்தது. 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு முன்னதாக 6.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 6.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 8.15 ரூபாய் முன்னதாக வாங்கப்பட்டது. தற்போது இது 8.55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது 9.65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 10.75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு வழிபாட்டுத்தலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.