தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து வருகின்றனர். அதே போல் நேற்று தமிழக மீனவர்கள் 13 பேர் மற்றும் அவர்களது மூன்று விசைப்படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பின்னர் அவர்கள் விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.