இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களுக்கு மொட்டை அடிக்கபட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில்.கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
எல்லையில் மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை மொட்டை அடித்து விடுதலை செய்துள்ளது. இதற்குப் பிறகு, ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கான எதிர்ப்பாக, செப். 20-ல் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மத்திய அரசையும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.