தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் மற்றும் மக்காத நைலான் செயற்கை நூல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக மாநில அரசு அரசியல் சாசனங்களை வெளியிட்டது. இதில் பட்டங்கள் பறக்க விடும் போது பசையுடன் கூடிய கண்ணாடித்தூள் தடவப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்துவதால் பறவைகள் மற்றும் மக்கள் பலர் காயமடைந்து வந்தனர். மேலும் சில இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. இதிலிருந்து மக்கள் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமாகிறது. மேலும் மக்கிப்போகாமல் நிலம், ஆறு, குளம் போன்ற இடங்களில் இவை கிடப்பதால் உயிரினங்கள் அதில் சிக்கி மூச்சு திணறி இறந்து விடுகின்றன.
இதனால் மாஞ்சா நூல் அல்லது பட்டம் பறக்க உபயோகப்படுத்தப்படும் நைலான் நூல்கள் அல்லது செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட நூல்கள் மற்றும் மக்காத நூல்கள் ஆகியவற்றை உபயோகிப்பதற்காக தமிழகம் முழுதும் தடை விதித்து உத்தரவு இடபட்டுள்ளது.