கனமழையின் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து நீர் தேக்கங்களிலும் நீர் நிரம்பியுள்ளன.இந்த நிலையில் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டாம் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்து தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தற்போது பூண்டி நீர் தேக்கத்தின் முழு கொள்ளளவான 3237 கன அடியில் 3076 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர் தேக்கங்களின் இருப்பு 10938 மில்லியன் அடியாக இருந்தது. இந்த ஆண்டு நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் வட மாவட்டங்களில் மழை நின்ற பிறகும் நீர்வரத்து இருந்து வருகிறது. எனவே ஆந்திரா அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.