தமிழக அரசு பட்டா மற்றும் வரைபடங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழக அரசு, நில ஆவணங்களை எளிதாக பெற https://eservices.tn.gov.in/eservicesnew/index.html இணையதளத்தை வழங்கியுள்ளது. தற்போது, ஒரு செல்போன் எண் மூலம் ஓ.டி.பி. பெற்றுப் பட்டா மற்றும் வரைபடங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 8 முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தமிழக அரசு இந்த கட்டுப்பாடுகளை நீக்கவில்லை.
புதிய முறையில், மாவட்டம், தாலுகா, கிராம விவரங்கள் கொடுத்தால், பட்டா மற்றும் வரைபடம் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த முறையை கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதித்து வெற்றி பெற்றுள்ளனர், மற்றும் விரைவில் இது நடைமுறைக்கு வரும்.